விஜய் டிவியின் பிரபலங்களின் பலருக்குமே தெரிந்த ஒரு ஒருவர் ஈரோடு மகேஷ். மேலும் கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலமாக நடுவராக இருந்தே இவர் அடிக்கும் கவுண்ட்டர்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு போட்டியாளர்களிடமுள்ள பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை மிகச் சரியாக கணித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது சின்னத் திரையில் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்து வரும் இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாகபணியாற்றி வந்த ஸ்ரீதேவியை திருமனம் செய்து கொண்டார். இந்த நிலையில் தான் ஈரோடு மகேஷ்ஷும் டிவி நிகழ்சிகளில் இருந்து வருவதால், அவரது மனவியையும டிவி நிகழ்சிகளில் தான் சந்தித்து இருக்கிறார்.
சண் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஸ்ரீதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகேஷ். மேலும் இந்த தம்பதிகளுக்கு அமிழ்தா என்ற ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், அவளுடைய பெயர் அமிழ்தா. இவர் ஓரு தமிழ் ஆசிரியர் என்பதால் தன் மகளுக்கு அழகான தமிழ் பெயரை வைத்து உள்ளார். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய தாய், மனைவி, மகள் தான் என்று அடிக்கடி சொல்லுவார்.
இந்த நிலையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரையை ஆகியவற்றில் படிப்படியாக வளர்ந்து வரும் ஈரோடு மகேஷ் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய அந்த புது காருடன் சேர்ந்தே, தனது மனைவி மற்றும் மகள் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.