அட என்னாது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மகன் உள்ளாரா? தனது மகனுக்கு பிறந்த நாள் என்று கூறி அவரே இணையத்தில் பதிவிட்ட வீடியோ!! அ திர்ச் சியான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் இப்போது மிகவும்தேடபடும் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இன்று தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களுடன் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இன்னும் சில நடிகர்கள் தான் பாக்கி. மேலும் தமிழை தாண்டி அம்மணி தெலுங்கு ஹிந்தி வரை சென்று அசத்தி வருகிறார். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் முதன் முறையாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க வந்திருக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் பொதுவாக கீர்த்தி சுரேஷ் மீது அடிக்கடி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்வது என்று விஷயம் இருக்கிறது என்றால் அது அவரின் சமூக வலைதள பதிவுகள் தான்.
அவர் ஜாலியாக பதிவு செய்து வருவதை, நெட்டிசன்கள் மீம்சுகலாக மாற்றி ட்ரென்ட் செய்து விடுவார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் அதையுமே கூட பாசிடிவாக ஜாலியாக எடுத்து கொண்டு தானும் கூட சேர்ந்து சிரித்து அந்த பதிவினை பகிர்ந்து வருவார். அப்படி தான் இப்போது நடிகை கீர்த்தி தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை சொந்த மகன் போலவே வளர்த்து வருகிறார்.
அவர் இப்போது அந்த நாய்குட்டிக்கு பிறந்த நாள் என்று கூறி அவரின் இன்ஸ்டா பக்கத்தில் “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த நாளோ அல்லது என்னடைய சோகமான ஒரு நாளோ அந்த நாளில் நீ கொடுத்த அன்பு தான் கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நான் சந்தித்ததே பெரிய பாக்கியம் என்று பாச மழையை பொழிந்து இருக்கிறார், “அன்பே நைக் ” என தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவுடன் சேர்ந்து அவர் வெளியிட்ட ஒரு நாய்க்கான ஒரு பிறந்த நாள் பாடல் பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அவர் தன நாய்க்காக தானே கிட்டாரினை எடுத்து தானே வாசித்து பிரபலமான வெப் தொடரின் பாடல் பாடி பதிவிட்டு இருந்தார். இதனை பல நெட்டிசன்கள் மீம்சுகலாக மாற்றி கிண்டல் செய்து வருகின்றனர்.
View this post on Instagram