வெள்ளித்திரையில் இவரின் பெயரை சொன்னால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை சினிமாத்துறையில் பிரபல கதாநாயகன், வில்லன், காமெடி, குணசித்திர வேடங்கள் என இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு திரைபடங்களில் தன் அசாத்திய நடிப்பு திறமையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ். முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.இந்நிலையில் இவர் முதன் முதலில் தமிழில் கண்ணன் ஒரு கை குழந்தை எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
புகைப்படத்தின் இருக்கும் குழந்தை வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் தான்.தமிழில் கடந்த 2003 வெளியான “ஸ்டுடென்ட் நம்பர் 1 2003 என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிபிராஜ்.
அதன் பின்னர் தமிழில் “ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்கள் தோல்வியிலேயே முடிவடைந்தது.
நடிகர் சிபிராஜ் ஐடி படங்கள் ரேவதி என்ற பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார் பின்னர் அவரையே கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் சிபிராஜிற்கும் தீரன் மற்றும் சமாரன் என்ற இரு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வளம் வர முடியாமல் முன்னணி ஆண்டுகளாக தவித்து வந்தார் சிபிராஜ்.
இதுவரை இவர் நடித்த படங்களிலேயே “லீ”, “நாய்கள் ஜாக்கிரதை” போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு வெற்றி படமாக அமைந்திருந்தது.