விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ராஜா ராணி தொடர் மூலம் அனைவரும் விரும்பும் ரீல் தம்பதியாக பிரபலமானவர்கள் தான் ஆல்யா சஞ்சீவ் தம்பதி.
இவர்கள் பின்னாளில் நிஜத்திலும் தம்பதிகளாக மாறி ஐலா என்னும் பெண்குழந்தைக்கு பெற்றோர்களானார்கள்.
ஆல்யா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜாராணி 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரபப்பாகும் கயல் எனும் தொடரில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் தான், சஞ்சீவ் லைவ் ஒன்றில் தனது மனைவி ஆல்யா கர்ப்பமாக உள்ள விஷயத்தை கூறியுள்ளார். அதில் அவர் ஐலா-2 வர உள்ளதாக கூறி தங்களது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.