இசைஞானி என்றால் அனைவருக்கும் பிடித்தவர் இளையராஜா தான். இவரைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவருக்கு, திருமணமாகி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர். மேலும் 2011 ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி இறந்து விட்டார் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் இளையராஜாவின் நிஜவாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டுள்ள சம்பவத்தை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர் பல ஆயிரம் காதல் பாடல்களை இயக்கி காதலுக்கு பாலமாக இருந்தவருக்கே காதல் தோல்வியா..!! என அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிருக்கு இருக்கிறது இவரின் காதல் வாழ்க்கை. ஏனென்றால் பல ஆயிரம் காதல் பாடல்களை இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இளையராஜா.
அவருக்கே காதல் தோல்வி என்ற சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதாவது 1970ஆம் ஆண்டு காயத்ரி வீணா என்ற பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தாராம். இவரும் காதல் பருவத்தில் என்னவெல்லாம் இளசுகள் செய்யுமோ அனைத்தும் செய்து தனது காதலை நிருபித்துள்ளார்.
மேலும் காயத்ரி வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதா நேரடியாக காயத்ரியை vice-chancellor ஆப் தமிழ் நாடு மியூசிக் என்ற பொறுப்பை அவர் கொடுத்தாராம். மேலும் இவரது காதலுக்காக இவர் இத்தனை செய்தாலும் அந்த அம்மாவிருக்கு இவரின் காதலில் விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் காதல் தொல்லை தாங்க முடியாமல் அவர் சமுகத்தை சேர்ந்த கப்பலில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு வராமல் இருந்தார்கள்.
இவர் ஏழு வருடங்கள் கப்பலில் தனது வாழ்க்கையை கழித்து உள்ளாராம். அந்த அளவிற்கு இளையராஜாவின் டார்ச்சர் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தின் செய்தி தொடர்பாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.