என்னாது வெப் சீரியலில் களமிறங்கிய நடிகை த்ரிஷா .. இதோ அவரே கொடுத்த புதிய அப்டேட்டை பார்த்து அ திர் ந்து போன ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகையான திரிஷா , தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தின் துணை நடிகையாக நடித்து தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை த்ரிஷா.
அதன்பிறகு 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.அதன்பிறகு த்ரிஷாவின் சினிமா பயணம் ஓஹோ என்ற அளவிற்கு சூப்பரான இருந்தது. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்தார்.இப்போது த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
அப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.இந்நிலையில் புதிதாக நடிப்பதற்கு கதைகள் கேட்டு வந்தார் த்ரிஷா. இதில் வெப் சீரிஸ் ஒன்றின் கதை த்ரிஷாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதன் பணிகள் தொடங்கப்பட்டன. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கியுள்ளார்.’பிருந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின்
படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் 16 முதல் தொடங்கப்பட்டது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. படக்குழு அதுகுறித்த தகவலை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.