கணவரும் இறந்து விட்டார்… பட வாய்ப்பில்லாமல் நான் அனாதையாக நிற்கிறேன்… இப்படி இருக்க வடிவேலு தான் காரணம்… பிரபல நடிகை கண்ணீர்…!!

சினிமா

திரையுலகில் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேல். இவர் காமெடியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். பிரபல நடிகை பிரேமா பிரியா எனக்கு வாய்ப் பில்லாமல் போனது.

அதுவும் இவரால் தான். இவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் ஏபிசிடி, பம்பரக் கண்ணாலே, இந்திரலோகத்தில் நா அழகப்பன், ராஜா ராணி போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த பிரேமா பிர்யா வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இவர் கூறியதாவது 7 மாதங்களுக்கு முன் என் கணவர் சர்க்கரை நோயால் மரணமடைந்தார்.

மேலும் இது குறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை. என் மகள் படிப்பிற்கு கஷ்டப்பட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். கணவர் இறப்பதற்கு முன் நன்றாக இருந்த என் வாழ்க்கை கணவர் இறந்த பின் இல்லை. சாப்பட்டுக்கே வலி இல்லாமல் நிற்கிறேன் என கூறியுள்ளார்.

சினிமாவில் எனக்கு வாய்ப்பில்லாமல் போக காரணமே வடிவேலு தான். சுறா திரைப்படத்தில் அவருடன் நான் நடிக்க இருந்தது. ஆனால் அவர் என்னை நடிக்க விடாமல் வேறொருவரை நடிக்க வைத்து விட்டார். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அவருக்கு பிடிக்காதவராக இருந்ததால் பல படங்களில் என்னை நடிக்க விடாமல் தடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்ட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் கோபப்பட்டு வடிவேலுவிடம் சண்டை போட்டிருக்கிறேன். ஏவிஎம் ஸ்டுடியோவில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரின் முன்னிலையில் வடிவேலுவை கண்ட படி திட்டியதால் தான் எனக்கு இன்று வரை வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று நடிகை பிரேமா பிரியா கூறியுள்ளார்…