தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். இந்த ப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சொல்லி விடவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தான் நடித்த தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெற்றிப் பெறாத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி அப்பா அர்ஜுனின் தொழிலைக் கவனித்து வருகிறார்.
மேலும் இந்நிலையில், இவர் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தம்பி ராமையாவின் மகன் உமாபதி தமிழில் அதாகப்பட்டது மஹா ஜனங்களே என்றத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தவர். பிரபல தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 4ஆவது இடத்தை பிடித்தார்..