நம் முன்னோர்கள் வீட்டு விஷேசங்களின் போது பூஜைக்கு மாவிலை பயன்படுவதும், தோரணம் கட்டுவதும் ஏன் தெரியுமா? நீங்கள் அறிந்திராத மா இலையின் அற்புத பலன்கள்… இதோ…!!

Tamil News

நம் வாழ் நாளில் பல விழாக்கள், கோவில் பண்டிகைகள், பல வீட்டு விஷேசங்களைப் பார்த்திருப்போம். வீட்டு விஷேசங்களின் போது அனைவரும் பின்பற்றப்படக் கூடிய சடங்குகளை நாமும் செய்திருப்போம். அந்த காலத்தில் செய்த சடங்கு, சம்பிரதாயங்களை நாம் இன்றும் ஏன் செய்கிறோம் என்று கூட அறிந்து கொள்ளாமல் செய்து வந்திருப்போம். அதில் ஒன்று தான் விஷேசங்களின் போது மாவிலை கட்டுவது என்ற செயல்.

விஷேசங்களின் பொது மாவிலை ஏன் கட்டுகிறோம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

நம் வீட்டில் நிகழக் கூடிய விழாக்கள் மற்றும் விஷேசங்களுக்கு நம் உறவினர்களை அழைப்பது வழக்கம். நாம் அழைத்ததன் பேரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வருவார்கள். விசேஷத்துக்கு வருபவர்களில் சிலருக்கு உடல் உபாதைகள் இருந்தாலும் கூட அவர்களை நாம் வரக்கூடாது என தடுக்க முடியாது. ஆனால் அப்படி வருபவர்களை தடுக்க முடியா விட்டாலும், அவர்கள் வருவதால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுக்களைத் தடுக்க வேண்டியது விஷேசத்திற்கு அழைத்த நம்முடைய கடமையாகும்.

விழாக்களின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் காற்றில் அசுத்தம் அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக அங்கு வரக்கூடிய குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இந்த ‘மாவிலை’ தோரணம்.

விழாக்களில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் இறைவனின் அருள் தரக்கூடியதாக இருக்கிறது. அதில் மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகதான் பூஜையின் போது கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலையின் மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை அருந்துவது போன்றவற்றை செய்வார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.

மாவிலை கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான பி ர ச் ச னைகள் கூட கட்டுக்குள் வரும். அதே போல் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழைவதையும் நாம் தடுக்க முடியும்.

மாவிலை தோரணம் காட்டுவதால் வீட்டில் இருக்கும் காற்றினை சுத்தம் செய்யக் கூடிய ஏர் ப்யூரிஃபயர் வேலையைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதே போல மாவிலைத் தோரணம் கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. அதனால் மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உட்கிரகித்துக் கொண்டு, சுற்றுச் சூழலைச் சீர் செய்யக் கூடியதாக இருக்கிறது.

கோவில் விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் கூட அதன் சக்தி குறைவது இல்லை.

இப்படி பல்வேறு சக்திகளை தன்னுள் கொண்ட, ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய மாவிலைத் தோரணம் கட்டுவதை விட்டு விட்டு, கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் அலங்கார மாவிலை தோரணத்தைக் கட்டுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

இனியாவது வீட்டு விஷேச நாட்களில் மாவிலை தோரணத்தைக் கட்டி அதன் பலனை பெற்றிடுவோம். நம் அடுத்த தலைமுறையினருக்கும் அதன் அவசியத்தை உணர்த்திடுவோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்து ஆரோக்கியத்தைப் பெற்றிடுவோம்.