தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நடிகர் பிரசாந்த் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 17-வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
மேலும் இவர் 1990 ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே தனது அழகான தோற்றம் மற்றும் நடிப்பால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், பூ மகள் ஊர்வலம், ஜீன்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் இவருக்கு சினிமாவில் முன்னணி பிரபலம் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. இவர் இறுதியாக அடைக்கலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அதன் பின் இவர் நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். நடிகர் பிரசாந்த் 2005-ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் கிரகலட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் ஆனதாக தகவல் வெளியானது. கிரகலட்சுமி கல்லூரியில் படிக்கும் போது தனது தோழியின் அண்ணனான வேணு பிரசாந்த் என்பவரை கா தலி த்து 1988-ல் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் அதன் பின் இவர்கள் இருவரும் அவரவர் வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் அதை ஏற்று கொள்ளாத நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின் வேணு பிரசாந்தும் லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிரகலக்ஷ்மியும் நடிகர் பிரசாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்து குழ்நதை பிறந்த நிலையில் தனது மனைவிக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் ஆனதை தெரிந்த நடிகர் பிரசாந்த் அவரை விவகாரத்து செய்து விட்டார்.
தற்போது 48 வயதாகும் நடிகர் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றுள்ளார். மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம்…